Posts

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து " கதை சொல்லும் நிகழ்வு " இன்று 06.02.26 வெள்ளிக்கிழமை தாளமுத்துநகர் R. C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Image
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து " கதை சொல்லும் நிகழ்வு " இன்று 06.02.26 வெள்ளிக்கிழமை தாளமுத்துநகர் R. C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. வின்சென்ட் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தருவைக்குளம் கிளை செயலாளர் தோழர். லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நிகழ்வின் சிறப்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர். புளோரா மாணவர் மாணவியர்களுக்கு நற்பண்புகள் வளர்க்கும் கதைகள் சொல்லி ஊக்குவித்தார். மாணவர்கள் மகிழ்வுடன் கேட்டு ரசித்தனர். நிறைவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருன்றம் தூத்துக்குடி மாநகர கிளை செயலாளர் தோழர். ஆ. மாரிமுத்து நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் அமைப்பாளர் தோழர்.அ. ரவி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் புத்தக வாசிப்பு நற்பணி ம...

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் இன்சுவை வரவேற்றார் மருத்துவர் ஆக்னஸ் லலிதா புற்றுநோய் குறித்து விளக்கினார் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமை வகித்தார் உறவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் தொடர்ந்து அவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது புற்று நோய் சிகிச்சை பிரிவு தலைவர் மருத்துவர் லலிதா சுப்பிரமணியன் நன்றி கூறினார்  

கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

Image
கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு. தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில்  குடியரசு தினத்தன்று கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நுண்ணுயிரியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மக்களின் குறைகளை எடுத்துக் கூறினர், மற்றும் மக்களின் தேவைகளை குறித்தும் எடுத்துக் கூறினர். சமூக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எம் மாணவிகள் எடுத்துரைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சண்முக ஐயா ,செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் பல முக்கியமான உறுப்பினர்கள்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி ப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக...

கோரம்பள்ளம் கிராம சபைக் கூட்டத்தில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

Image
கோரம்பள்ளம் கிராம சபைக் கூட்டத்தில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு தூத்துக்குடியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தூய மரியன்னை கல்லூரியின் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கோரம்பள்ளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பு, கிராம மக்களின் தேவைகளை எடுத்துரைத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) கணிதத் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கோரம்பள்ளத்தில் (26.01.2026) அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் கிராம வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவிகளையும் கிராம மக்களின் தேவைகளையும் தெரிந்து கொண்டனர். இக்கூட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்து செயலாளர் திரு. சத்யராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ திரு.சண்முகய்யா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அரசு பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கோரம்பள்ளம் ஊர் மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். சுற்றுச...

வீட்டு உணவு நிலைத்தன்மைக்கான விதை வழங்கல் இயக்கம் (26.01.2026)

Image
வீட்டு உணவு நிலைத்தன்மைக்கான விதை வழங்கல் இயக்கம் (26.01.2026) தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி, தூத்துக்குடி, தாவரவியல் துறை, சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) மற்றும் “உன்னத் பாரத் அபியான்” (UBA) கீழ் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் “வீட்டு உணவு நிலைத்தன்மைக்கான விதை வழங்கல் இயக்கம்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் II B.Sc. தாவரவியல் மாணவிகள் கவிதா மற்றும் எப்சிபா ராணி சமையல் தோட்டம் மூலம் நிலையான உணவு உற்பத்தி குறித்து சிறப்புரையாற்றினர். வீட்டு தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதன் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு, செலவு குறைப்பு மற்றும் ஆரோக்கிய உணவு கிடைப்பது குறித்து அவர்கள் விளக்கினர். கிராம மக்களுக்கு சமையல் தோட்டத்திற்கு பயன்படும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டு, அவற்றை வளர்ப்பதற்கான எளிய முறைகள் விளக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி கிராம மக்களை வீட்டு தோட்டம் அமைக்க ஊக்குவித்து, உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டது.

சவேரியார்புரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி, மாணவிகள் பங்கேற்பு

Image
சவேரியார்புரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி, மாணவிகள் பங்கேற்பு தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி, தூத்துக்குடி, தாவரவியல் துறை, “உன்னத் பாரத் அபியான்” (UBA) மற்றும் சமூக மேம்பாட்டு திட்டத்தின் (CDP) கீழ் சவேரியார்புரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றது. இந்த கூட்டத்தில் II B.Sc. தாவரவியல் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி தொடர்பான விவாதங்களை கவனித்தனர். கிராமத்தின் குடிநீர் வசதி, சுகாதாரம், கல்வி, சுகாதார சேவைகள், பெண்கள் நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடினர். மாணவிகள் கிராம மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் சவால்களை அறிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு கிராம நிர்வாகம் மற்றும் சமூக பங்களிப்பு குறித்து நடைமுறை அறிவை வழங்கியது. கல்லூரி கிராம மக்களின் நலனுக்காக தொடர்ந்து சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது

கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.

Image
கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு. தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தில் இன்று கோவங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வணிகவியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கோவங்காடு ஊராட்சி செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஆல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். வணிகவியல் துறை (சுயநிதி பிரிவு) ஒருங்கிணைப்பாளர் கீதா மகேஸ்வரி, பேராசிரியர் ஜெ.அஜித்தா மாணவிகளை வழிநடத்தினர்.