Posts

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது

Image
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து ஆண் பெண் விண்ணொளி போட்டி தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தினரால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஆண்கள் பிரிவில் ஆறு அணியினரும் பெண்கள் பிரிவில் நான்கு அணியினரும் இந்த 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்தியாவில் தலைசிறந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும் இதற்கான அனுமதி இலவசம் நம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி நமது மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டினை மேலும் சிறப்பாக வளர்த்திடும் உயரிய நோக்கத்தில் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன சுமார் 5000 பேர் அமர்ந்து தினமும் வி...

தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

Image
தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடியில் ஞாயிறு காலை யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு வரவேற்புரை ஆற்றினார் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் யாழ் மொழி பதிப்பகம் தொடர்ந்து நோக்க உரையாற்றினார் மேகவர்ஷினி நிறுவனர் மற்றும் யாழ்மொழி பதிப்பாசிரியர் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்கள் செலஸ்டின் மகிமை ராஜ் ஆசிரியர் தென்தமிழ் பேரவை தூத்துக்குடி தொடர்ந்து தூத்துக்குடி எழுத்தாளர் ஆ . மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் திரு முருகன் மதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் புத்தக வெளியீட்டு விழா தொடர்ந்து நடைபெற்றது புத்தகம் 1 நூலின் பெயர் இரக்கத்தை வாழ்க்கையாக்கும் ஆசிரியர் கலக்கல் கந்தசாமி வெளியிடுபவர் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் பெறுபவர் யாழ் மொழி படிப்பாசிரியர் மேஹவர்ஷினி புத்தகம் 2 நூலின் பெயர் இங்கே எல்லாம் அதிசயங்கள் ஆசிரியர் மணிகண்டன் வெளியிடுபவர் கலக்கல் கந்தசாமி பெறுபவர் செலேஸ்டின...

ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்:தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது

Image
ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்: தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி 16.03.2026 முதல் 20.03.2026 வரை காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. துவக்க நிகழ்வானது வரலற்றுத்துறை தலைவர் முனைவர் அ.மாலினி அப்சலா அவர்களால் வாழ்த்துரையுடன் துவக்கப்பட்டது. Morning Star NGO அமைப்பின் பிரதிநிதிகளான திருமதி இராசாத்தி மற்றும் முதன்மை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு ஆரி வேலைக்கான அடிப்படை முறைகள், தையல் வடிவங்கள் மற்றும் அலங்கார நுட்பங்கள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினர். இந்நிகழ்வானது கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ், மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெஜி ஆகியோரின் வாழ்த்துக்களுடன்,...

மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

Image
மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது தூய மரியன்னை கல்லூரி – தன்னாட்சி, தூத்துக்குடி ஆங்கிலத் துறையின் முதுநிலை மற்றும் ஆய்வு துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் இணைந்து “ஒரு மரம் நட்டு, எதிர்காலத்தை வளர்ப்போம்” என்ற தலைப்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை 04.03.2026 அன்று காலை 6.30 மணிக்கு தருவைக்குளத்தில் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மரநடுகையை ஊக்குவிக்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மரக்கன்றுகளை நட்டு பசுமையை வளர்த்தனர். இந்நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் டாக்டர் பி. செரீனா மார்கரெட் மற்றும் டாக்டர் எஸ். புலோமைன் ரெஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பொறுப்பாசிரியர்கள் டாக்டர் மு. ஹெமினா மற்றும் திருமதி மெல்பா ஷேரன் அவர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. அனைவரின் உற்சாகமான பங்கேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தூய மரியன்னை கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள்பழைய காயலில் தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

Image
தூய மரியன்னை கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள்பழைய காயலில் தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (CDP) மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் இணைப்பில், 28.02.2026 அன்று பழைய காயல் ஊராட்சியில் இளம் பெண்களுக்கான தொழில்முனைவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளம் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான எளிய மற்றும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சிறு தொழில்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளக்கூடிய சேவை சார்ந்த தொழில்முனைவு வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனுடன், பெண்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் உடை தொடர்பான சேவைகளை தொழில்முனைவு முயற்சியாக மாற்றும் வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வளநர் ஆக விலங்கியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி விஷிகா செயல்பட்டு, இளம் பெண்களுக்கு பயனுள்ள தொழில்முனைவு திறன்களை எளிய முறையில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி, செயலர் ம...

தூத்துக்குடிஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் நலப்பணித்திட்ட அணி எண்கள் 47&57 சார்பாக சிறப்பு முகாம்22-02-26 முதல் 28-02-26 வரை தருவைக்குளத்தில் நடைபெற்று வருகிறது

Image
தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் நலப்பணித்திட்ட அணி எண்கள் 47&57 சார்பாக சிறப்பு முகாம்22-02-26 முதல் 28-02-26 வரை தருவைக்குளத்தில் நடைபெற்று வருகிறது இம்முகாமில் இன்று 26-02-26 காலை 9 மணியளவில் பல் மருத்துவ முகாம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்திய பல்மருத்துவ சங்கத்தில் இருந்து 13 மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர் ஏற்பாடுகளை நாட்டு நலப் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ச. ஸ்டெல்லா பாக்கியம் (47) முனைவர் மு. புஷ்பகவல்லி(57) மாணவிகளும் இணைந்து சொயலாற்றினர்

தூத்துக்குடி மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் – டச் (TOUCH), உன்னத் பாரத் அபியான் மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை இணைந்து, 26.02.2026 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை தருவைகுளம் புனித மைக்கேல் ஆரம்பப் பள்ளியில் சிறுதானிய உணவுப் பொருட்கள் குறித்த செய்முறைப் பயிற்சியை நடத்தியது.

Image
தூத்துக்குடி மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் – டச் (TOUCH), உன்னத் பாரத் அபியான் மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை இணைந்து, 26.02.2026 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை தருவைகுளம் புனித மைக்கேல் ஆரம்பப் பள்ளியில் சிறுதானிய உணவுப் பொருட்கள் குறித்த செய்முறைப் பயிற்சியை நடத்தியது. சிறுதானிய உணவுப் பொருட்கள் தொழில் முனைவோரான திருமதி மு. தன்வீர் ஷஹானா அவர்கள் வளநபராக கலந்து கொண்டு, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பை விளக்கி, பல்வேறு சிறுதானிய உணவுகளை தயாரிக்கும் முறையை செய்முறையாகக் கற்றுக் கொடுத்தார். இப்பயிற்சி பெண்களுக்கு தொழில் முனைவு திறனையும் சுயதொழில் வாய்ப்புகளையும் ஊக்குவித்தது. முனைவர் மரியா சகாய ஷர்மிளா அவர்கள் மேற்கொண்ட “சிறுதானிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குதல்” என்ற திட்டத்தின் வெற்றிகரமான தாக்கத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆங்கிலத் துறைத் தலைவர் முனை ...