Posts

ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல் -

Image
ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள் : யோசனைகளை வணிகமாக மாற்றுதல் - தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) நிறுவனத்தின் நிறுவன புத்தாக்க மன்றம்(IIC) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு (EDC) ஆகியவை யங் இந்தியன்ஸ்   அமைப்புடன் இணைந்து " ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள் : யோசனைகளை வணிகமாக மாற்றுதல் " என்ற தலைப்பில் துவக்க விழா மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியை 03.08.2026 அன்று ஸ்டார் ஹாலில் சிறப்பாக நடந்தது. முனைவர் எஸ். காயத்ரி  தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று   நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் . வருண் அரவிந்த் , படைப்பாக்க இயக்குநர் மற்றும் இணை நிறுவனர், ஸ்டுடியோ சினிஸ்டா  சிறப்பு வளமுனைவராக கலந்து கொண்டார். அவர்கள் தொழில்முனைவு சிந்தனை, புதுமையான யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் வழிமுறைகள், தொடக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், தலைமைத்திறன் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தொழில்முனைவு...

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் சத்யா கோப்பை காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்றது

Image
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் சத்யா கோப்பை காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோபிக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து இறுதிப்போட்டி ஞாயிறு மாலை நடைபெற்றது பெண்கள் பிரிவில் எஸ் டி ஏ டி சென்னை அணியும் அவர்களை எதிர்த்து கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் விளையாடினர் இதில் மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று எஸ் டி ஏ டி சென்னை அணியினர் சத்யா கோப்பையை கைப்பற்றியது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வருமானவரித்துறை சென்னை அணியினரும் கே எஸ் இ பி கேரளா அணியினரும் மோதினார்கள் இதில் வருமானவரித்துறை சென்னை அணி மூன்று ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது பரிசளிப்பு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன் அவர்கள் வரவேற்புரை ஏற்றினார் சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ஜான் ரோஷன் அவர்களும் வ உ சி துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ் பி மோகன் குமார் அவர்களும் வ உ சி துறைமுகம் ஆணையத்தின் முதன்மை பொறியாளர் சீ...

தொடுவானம் கலை இலக்கியப் பேரவை சார்பில் இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா

Image
தொடுவானம் கலை இலக்கியப் பேரவை சார்பில் இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடி, ஜூன் 14: “சிறகை விரி, வானமே எல்லை” என்ற இலட்சிய முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 40-வது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி இரயில் நிலையம் அருகிலுள்ள ஆயர் இல்ல இளையோர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் நெல்லை தேவன் தலைமை வகித்தார். அன்னம் காலாண்டிதழ் ஆசிரியர் பணி. ச.தே. செல்வராசு தலைமை உரையாற்றினார். கருவூலத்துறை பணி நிறைவு அலுவலரும் இலக்கிய ஆர்வலருமான . எம்.எஸ். செய்யது முஹம்மது ஷெரீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் . நெல்லை தேவன் வரவேற்புரையாற்றி, தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் பணிகள், இலக்கிய வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில், வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள . நா. மாணிக்கவாசகம் “கர்ணன் குற்றவாளியா?” என்ற தலைப்பில் விரிவான உரையாற்றினா...

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது

Image
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பை காண 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது சத்யா கோப்பைக்கான 27 வது அகில இந்திய கைப்பந்து ஆண் பெண் விண்ணொளி போட்டி தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தினரால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஆண்கள் பிரிவில் ஆறு அணியினரும் பெண்கள் பிரிவில் நான்கு அணியினரும் இந்த 27 வது அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்தியாவில் தலைசிறந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும் இதற்கான அனுமதி இலவசம் நம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி நமது மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டினை மேலும் சிறப்பாக வளர்த்திடும் உயரிய நோக்கத்தில் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன சுமார் 5000 பேர் அமர்ந்து தினமும் வி...

தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

Image
தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடியில் ஞாயிறு காலை யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு வரவேற்புரை ஆற்றினார் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் யாழ் மொழி பதிப்பகம் தொடர்ந்து நோக்க உரையாற்றினார் மேகவர்ஷினி நிறுவனர் மற்றும் யாழ்மொழி பதிப்பாசிரியர் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்கள் செலஸ்டின் மகிமை ராஜ் ஆசிரியர் தென்தமிழ் பேரவை தூத்துக்குடி தொடர்ந்து தூத்துக்குடி எழுத்தாளர் ஆ . மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் திரு முருகன் மதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் புத்தக வெளியீட்டு விழா தொடர்ந்து நடைபெற்றது புத்தகம் 1 நூலின் பெயர் இரக்கத்தை வாழ்க்கையாக்கும் ஆசிரியர் கலக்கல் கந்தசாமி வெளியிடுபவர் மகேஸ்வரன் நிர்வாக இயக்குனர் பெறுபவர் யாழ் மொழி படிப்பாசிரியர் மேஹவர்ஷினி புத்தகம் 2 நூலின் பெயர் இங்கே எல்லாம் அதிசயங்கள் ஆசிரியர் மணிகண்டன் வெளியிடுபவர் கலக்கல் கந்தசாமி பெறுபவர் செலேஸ்டின...

ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்:தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது

Image
ஆரிவேலை குறித்த பயிற்சி முகாம்: தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் ஆரி வேலை குறித்த கைமுறை பயிற்சியானது கீழ அழகாபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி 16.03.2026 முதல் 20.03.2026 வரை காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. துவக்க நிகழ்வானது வரலற்றுத்துறை தலைவர் முனைவர் அ.மாலினி அப்சலா அவர்களால் வாழ்த்துரையுடன் துவக்கப்பட்டது. Morning Star NGO அமைப்பின் பிரதிநிதிகளான திருமதி இராசாத்தி மற்றும் முதன்மை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு ஆரி வேலைக்கான அடிப்படை முறைகள், தையல் வடிவங்கள் மற்றும் அலங்கார நுட்பங்கள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினர். இந்நிகழ்வானது கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ், மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெஜி ஆகியோரின் வாழ்த்துக்களுடன்,...

மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

Image
மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது தூய மரியன்னை கல்லூரி – தன்னாட்சி, தூத்துக்குடி ஆங்கிலத் துறையின் முதுநிலை மற்றும் ஆய்வு துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் இணைந்து “ஒரு மரம் நட்டு, எதிர்காலத்தை வளர்ப்போம்” என்ற தலைப்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை 04.03.2026 அன்று காலை 6.30 மணிக்கு தருவைக்குளத்தில் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மரநடுகையை ஊக்குவிக்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மரக்கன்றுகளை நட்டு பசுமையை வளர்த்தனர். இந்நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் டாக்டர் பி. செரீனா மார்கரெட் மற்றும் டாக்டர் எஸ். புலோமைன் ரெஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பொறுப்பாசிரியர்கள் டாக்டர் மு. ஹெமினா மற்றும் திருமதி மெல்பா ஷேரன் அவர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. அனைவரின் உற்சாகமான பங்கேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.