கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில்  குடியரசு தினத்தன்று கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நுண்ணுயிரியல் துறை (சுயநிதிப் பாடப்பிரிவு) இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மக்களின் குறைகளை எடுத்துக் கூறினர், மற்றும் மக்களின் தேவைகளை குறித்தும் எடுத்துக் கூறினர். சமூக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எம் மாணவிகள் எடுத்துரைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சண்முக ஐயா ,செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் பல முக்கியமான உறுப்பினர்கள்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி

ப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். நுண்ணுயிரியல்  துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலுவை கிருபாகரி அனிஸ்சியா , துனை பேராசிரியை திருமதி. சுஜித்தா அவர்கள் வழி நடத்தினார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது